முக நூலிலிருந்து....
• நடக்கும் கால்களில் எவ்வளவு வித்தியாசம்...
ஒன்று "முன்னால்'
என்றால் மற்றொன்று "பின்னால்'.
ஆனால் முன்னால் இருக்கும் கால்
"கர்வப்படவும்' இல்லை...
பின்னால் இருக்கும் கால் "அவமானப்படவும்' இல்லை...
அவற்றுக்குத் தெரியும்
நிமிடத்தில் நிலைமை மாறும் என்று !
- மதுரை தமிழன்
• உண்மையான உறவு
தானாய் உருவாவதில்லை...
உறவில் உண்மையாய் இருப்பதால்
உருவாகின்றது.
- பாலு பெர்ரிஸ்
• மிக ஆழமான விஷயங்களைக் கூட...
கத்தாமல் கேட்கிற குரலில்,
கொண்டு சேர்த்துவிட முடியுமென்று படுகிறது.
- இரா எட்வின்
• சிகரம் நோக்கி
நடப்பவர்கள்...
சிதறு தேங்காய்களுக்கு
ஓடுவதில்லை.
- பாலகிருஷ்ணன். ஆர்
• மனிதர்கள் வயது முதிர்வதால் கனவு காண்பதை நிறுத்திக் கொள்வதில்லை;
கனவு காண்பதை நிறுத்திக் கொள்வதால் அவர்களுக்கு வயது முதிர்கிறது.
- துரை பாரதி
சுட்டுரையிலிருந்து...
• கிடைக்காத போது எதுவும்
தேவை அதிகமாக தோன்றும்..!
கிடைத்த பின்போ அது அதிகம்
தேவையில்லாதது போல தோன்றும்!
- அனு ப்ரியா
• எனக்கு யாருமே உதவி
செய்யவில்லையென புலம்பாதீர்கள்...
அவரவர்கள் சூழ்நிலை
அவரவர்களுக்கு மட்டுமே தெரியும்.
- மாஸ்டர் பீஸ்
• குன்றின் மேலிட்ட விளக்கு என்பது
அதிசயமாயிருந்தது...
சோலார் பவர் வரும் முன்.
- பிறை சூடர்
• ஹெல்மெட் போட்டுட்டுப் போனா
உயிருக்கு நல்லதுன்னு சொல்றவன் மனுஷன்...
ஹெல்மெட் போடுங்க...
அந்த பக்கம் போலீஸ்
நிக்கிறாங்கன்னு சொல்றவன்
பெரிய மனுஷன்...
- சிற்பன்
• ஏக்கத்தில் பாதி...
தூக்கத்தில் பாதி... போனது போக
மீதி வாழ்க்கை எல்லாம்...
மொபைல் ஃபோன்களுக்கு சார்ஜ்
போடறதுலயே
போய்டும் போலயே... !
- ஸ்வீட்டி
வலைதளத்திலிருந்து...
மனையாட்டி ஊருக்கு போயிருந்த நாளில் தன்னிச்சையாக
மொட்டை மாடிக்குப் போனான்.
கருநீல வானத்தில் கரைந்து நின்றான். குறைமதிக்கும் நெஞ்சழிந்தான்.
நட்சத்திரங்களில் மினுமினுத்தான்.
அவள் வீட்டில் இருக்கையில் இவ்வளவு பெரிய வானம்...
இத்தனை கோடி விண்மீன்கள்
இப்படி ஜொலிக்கும் நிலவு... இவையெல்லாம் எங்கே ஒளிந்து கொள்கின்றன? என்று ஒரே ஒரு கணம் யோசித்தான்.
மறுகணம்...
அஞ்சி நடுங்கி...
‘miss u’ என்றொரு குறுஞ்செய்தி அனுப்பினான்.
http://isaikarukkal.blogspot.in/