கூந்தல் பராமரிப்பு!

முடி கொட்டுவது தொடர்ந்து கொண்டிருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.
கூந்தல் பராமரிப்பு!

* முடி கொட்டுவது தொடர்ந்து கொண்டிருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.  
* தலை குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும். 
* அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். அதேபோல் ஷாம்பு தேய்த்து குளிக்கும்போது  முடியை நன்றாக அலசவும்.
* ஒவ்வொரு முறை தலை குளிக்கும்போதும் கன்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கன்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிபாகத்தில் தடவுவது நல்லது. கன்டிஷனர் உபயோகிக்கும்போதும் முடியை நன்றாக அலச வேண்டும்.
* ஷாம்பு போட்டு தலைகுளித்தப் பிறகு,  ஒரு தேக்கரண்டி விநிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து அதனைக் கொண்டு தலைமுடியை அலசவும். உங்கள் தலைமுடி மிருதுவாகவும், பளபளபாகவும் இருக்கும்.
* மருதாணி தலைமுடிக்கு மிகச்சிறந்த கன்டிஷனர். ஆகவே, முதல்நாளே ஷாம்பூ போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து வெறுமனே அலசி விடலாம். மருதாணியைத் தலையில் தேய்த்து ஊறவைத்த பிறகு ஷாம்பூ போடக் கூடாது.
* சீப்புகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளப்பை மங்கச் செய்துவிடும்.
* வாரத்திற்கு ஒருமுறையேனும் விரல் நுனிகளால் தலைமுடியை மெதுவாக மசாஜ் செய்யவும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி நீளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளரும். 
- சுவாதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com