jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு வார இதழ்கள் மகளிர்மணி

தடகளத்தில் தடம் பதிக்கும் மாணவி!

By DIN  |   Published on : 20th December 2017 10:44 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

mm4

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஓராண்டில் சுமார் 10 மாதங்கள் கடுமையான குளிர்காற்று வீசும் சீதோஷண நிலை காணப்படும். அதிகாலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் வீசும் குளிர் காற்றில் சாதாரணமாக வீட்டில் இருந்தாலே உடல் முழுவதும் நடுங்கும். 
இப்படிப்பட்ட பருவ சூழ்நிலையில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மகளை தினமும் ஒசூர் அந்திவாடி விளையாட்டு மைதானத்துக்கு காலை, மாலை இருவேளைகளிலும் அழைத்துச் சென்று பயிற்சி அளித்து வட்ட, மாவட்ட, மண்டல, மாநில, தென்னிந்திய மற்றும் தேசிய அளவில் தடகளப் போட்டிகளில் தடம் பதிக்க வைத்துள்ளார் ஒரு தொழிலாளி. அதுவும் குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் விûளாட்டுகளில். இவ்விரு விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார் ஜென்சி சூசன். 
ஒசூர் சாந்தி நகரில் விசித்து வருகிறார் அகஸ்டியன் ஜெபராஜ் (45). பூர்வீகம் திருநெல்வேலி. வேலை தேடி ஒசூர் வந்த இவர் முதல் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழில்சாலையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். மனைவி ஜான்சி கெட்சி. இவர் தனியார் பள்ளி ஆசிரியையாக இருக்கிறார். இவர்களுக்கு ஜெனிடன் என்ற மகனும்(17), ஜென்சி சூசன்(15) என்ற மகளும் உள்ளனர். ஜென்சி தேசிய அளவில் குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். 
ஒசூர் பரிமளம் மெட்ரிக் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் ஜென்சி சூசனின் உடல் வாகைப் பார்த்த உடற்பயிற்சி ஆசிரியர் அசோக், குண்டு எறிதல் விளையாட்டில் முறையாக பயிற்சி அளித்தால் ஜென்சி சாதனைப் படைப்பார் என்று கணித்தார். பள்ளியின் நிர்வாக இயக்குநர் ரத்தினசபாபதி, தாளாளர் ஸ்ரீதர் ஆகியோர் ஜென்சிக்கு முறையாக பயிற்சி அளிக்க அனுமதி அளித்தனர்.
இந்தப் பயிற்சியை மேற்கொள்ளத் தான் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 5 முதல் 7 மணி வரையில் தீவிரப் பயிற்சி எடுத்து வந்தார் ஜென்சி. 
இது குறித்து ஜென்சி கூறுகையில்,"கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் 2016 -2017-ஆம் ஆண்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்தேன். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒசூர் சரக அளவில் நடைபெற்ற போட்டியிலும், மாவட்ட அளவில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற போட்டியிலும், மண்டல அளவில் தருமபுரியில் நடைபெற்ற போட்டியிலும் குண்டு மற்றும் வட்டு எறிதல் பிரிவில் முதலிடம் பெற்றேன். அதன் பின்பு மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வானேன்.
அக்டோபர் மாதம் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவில் குண்டு எறிதல் போட்டியில் 11.34 மீட்டர் தொலைவும், வட்டு எறிதலில் 37.44 மீட்டர் தொலைவும் வீசி முந்தைய சாதனைகளை முறியடித்தேன்.
இதனைத் தொடர்ந்து கேரளாவில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகி 13.38 மீட்டர் குண்டு எறிந்து முதலிடம் பிடித்தேன். இதனால் தேசிய அளவில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது. 
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் அண்மையில் நடைபெற்ற 63-ஆவது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியிலும் இரண்டு விளையாட்டிலும் முதல் இடத்தைப் பிடித்தேன்.
எனது வெற்றிக்கு எனது தந்தையின் விடாமுயற்சியும், உடற்பயிற்சி ஆசிரியர் அசோக்குமார் அளித்த ஊக்கமும்தான் முக்கிய காரணம். இன்னும் பல சாதனைகளைப் படைத்து பள்ளிக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இதுவே என் ஆசை'' என்கிறார் ஜென்சி. 
- த.ஞானப்பிரகாசம்

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்