பாலிவுட்டின் இளம் நடிகை சாயிரா வாசிம் விமானத்தில் பயணித்தபோது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர், முன்னிருக்கையில் நடிகை அமர்ந்திருந்த இருக்கையின் கை வைக்கும் பகுதியில் தனது காலை வைத்து தன்னை துன்புறுத்தியதாக, சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதற்கு பல தரப்பில் இருந்து ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில் சக நடிகையான கங்கனா ரணாவத்,"அந்த நபரின் செயல் மிகவும் தவறானது. இதுவும் ஒரு வகை துன்புறுத்தல்தான். நானாக இருந்திருந்தால் அந்த நபரின் காலை உடைத்திருப்பேன்'' என்று காட்டமாகக் கூறியுள்ளார்.