பாசப் போராட்டக் கதை!

தாய் - மகன் பாசப் போராட்டத்தை களமாக கொண்டு உருவாகி வரும் படம் "செவிலி.' அரவிந்த் ரோஷன், கீர்த்தி ஷெட்டி, பூவிதா, நெல்லை சிவா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பாசப் போராட்டக் கதை!

தாய் - மகன் பாசப் போராட்டத்தை களமாக கொண்டு உருவாகி வரும் படம் "செவிலி.' அரவிந்த் ரோஷன், கீர்த்தி ஷெட்டி, பூவிதா, நெல்லை சிவா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆர்.ஏ.ஆனந்த் எழுதி இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர்... "நம் கலாசாரத்தை பொறுத்தவரையில் தாய் பாசம் என்பது முதன்மையானது. எத்தனையோ நவீனங்களுக்கு மத்தியிலும், இன்னும் வசீகரமாக இருந்து கொண்டிருப்பது அதுதான். அந்த பாசப்பிணைப்புதான் இதன் களம். சிறு வயதில் இருந்தே தாய் அரவணைப்பு கிடைக்காத மகன், சமூகம் வெறுக்கும் மனிதனாக வளர்ந்து வருகிறான். ஒரு கட்டத்தில் தன்னிலை உணரும் அவன் தாயைத் தேடி அலைகிறான். அப்போது அவன் வாழ்க்கையில் நிகழும் அற்புதங்களே திரைக்கதை. இதனிடையே அவனை மனிதனாக மாற்றுகிற ஒரு காதல், பழைய வாழ்க்கையைத் தொடரும் படி வற்புறுத்துகிற எதிரிகள் என இன்னொரு களமும் உண்டு. மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. கேரள மாநிலம் அதிரம்பள்ளியில் படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த மாத வெளியீடாக படம் திரைக்கு வருகிறது'' என்றார் இயக்குநர் ஆனந்த்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com