மீண்டும்...

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஜோல், ஏவி.எம். நிறுவனத்தின் அழைப்பை ஏற்று "மின்சாரக் கனவு' படத்தில்
மீண்டும்...

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஜோல், ஏவி.எம். நிறுவனத்தின் அழைப்பை ஏற்று "மின்சாரக் கனவு' படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தார். முன்னணி வரிசையில் இருக்கும் போதே, திருமணம் செய்து கொண்ட கஜோல் சினிமாவிலிருந்து விலகினார். அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தவர், 19 வருடங்களுக்குப் பின் தமிழுக்கு வருகிறார்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு "வேலையில்லா பட்டதாரி-2' படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கலைப்புலி தாணுவோடு, தனுஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி இயக்குகிறார். அமலாபால், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், ரிஷிகேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. ஷான்ரோல்டன் இசையமைக்க, சமீர்தாஹிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com