தாயான பிறகு குண்டானால் தவறா?

தமிழில் "யாரடி நீ மோகினி' "வெண்ணிலா கபடிக் குழு' படங்களின் மூலம் பிரபலமானவர் சரண்யா மோகன்.
தாயான பிறகு குண்டானால் தவறா?

தமிழில் "யாரடி நீ மோகினி' "வெண்ணிலா கபடிக் குழு' படங்களின் மூலம் பிரபலமானவர் சரண்யா மோகன்.

சரண்யா தனது நெருங்கிய நண்பரும் பல் டாக்டருமான அரவிந்த் கிருஷ்ணனை 2015 இ ல் திருமணம் செய்து கொண்டார்.

சரண்யா சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தைக்குத் தாயானார். அப்போது சமூக தளத்தில் " ட்ரோல்' என்ற பெயரில் "நெட்டிசன்கள்' சரண்யாவைக் கேலியும் கிண்டலும் எல்லை மீறிச் செய்தனர்.

"திருமணத்திற்காகத் தனக்குப் பிடித்த நடிப்புத் தொழிலை விட்டு விட்டு தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று ஒரு நல்ல மனைவியாக, நல்ல மருமகளாக இருப்பதில் எனக்கு சந்தோஷம் தான் என்று கணவர் அரவிந்த் சமூக தளத்தில் சரண்யாவைப் பாராட்டி எழுதியிருந்தார்.

மகன் அனந்த பத்மநாபனைப் பெற்றெடுத்ததில் சரண்யாவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். அந்த சந்தோஷத்தில் பிரசவத்துக்குப் சரண்யா மோகன் குண்டானார்.

சரண்யாவின் படங்கள் சமீபத்தில் சமூக தளங்களில் வெளியாகி வைரலாகின.

மீண்டும் நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் என்ற பெயரில் கலாய்த்தனர். தரம் குறைந்த கமெண்டுகளை பதிவு செய்தனர்.

இம்முறை தடவை கணவர் அரவிந்த் அமைதியாக இருக்க, களத்தில் குதித்தவர் சாட்சாத் சரண்யாதான்.

தன்னைக் கலாய்த்தவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், "நான் ஒரு பெண். தாயாக இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். மகனுக்கு அமுதூட்டுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். எனது குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். குழந்தைகளைப் பெறுவது பெண்ணின் வல்லமை.

தாய்மைக்குப் பின் பெண்ணின் உடலில் மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். இது அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும். இப்போது எப்படி நான் இருக்கிறேனோ அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமுள்ள உண்மையான மனிதர் எனக்குக் கணவராகக் கிடைத் திருப்பதால் எனக்கு மகிழ்ச்சியே! என்று தன் முகநூல் பக்கத்தில் சரண்யா பதிவு செய்துள்ளார். சரண்யா போட்ட போடில் நெட்டிசன்கள் வாயை மூடிக்கொண்டார்கள்.
- பனிமலர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com