* வறட்டு இருமல் குணமாக... ஒரு தேக்கரண்டி தேனை உண்டால், அடுத்த சில நிமிடங்களில் இருமல் காணாமல் போய் விடும். அல்லது தேன், எலுமிச்சம் பழச் சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றிலும் கலந்து குடிக்கலாம். இருமலும், சளியும் ஓடி விடும்.
* தேனீக்கள் கொட்டிவிட்டால், கடுமையான வலியிருக்கும் அதற்கு பல் துலக்கும் பேஸ்ட்டை எடுத்து தேனீ கொட்டிய இடத்தில் தடவினால் அடுத்த சில நொடிகளில் வலி குறைந்து விடும். டூத் பேஸ்ட்டில் இருக்கும் அமிலத்தை நிலைப்படுத்தும் வேதிப்பொருள் மற்றும் எரிச்சலைக் குறைக்கக் கூடிய தன்மையே இதற்குக் காரணம்.
- சரோஜா சண்முகம்
* வெள்ளரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் ஒழுங்காக வரும். பெரும்பாடு குணமாகும்.
* நொச்சி இலையை கொதிநீரில் போட்டு ஆவி பிடித்தால், சுவாச அவஸ்தையின்றி இரவில் நன்றாகத் தூங்கலாம்.
* வேப்பம்பூவை எடுத்து தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி தலைக்குத் தடவிவந்தால், தலையில் உள்ள பேன், ஈறு, பொடுகு போன்றவை போய்விடும். முடியும் கொட்டாது.
* கசகசாவை ஊறவைத்து அரைத்துப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
- கே. பிரபாவதி