மும்பை அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்று லாமெர். ஐய்வர்யா ராய் உலக அழகியாகி புகழின் உச்சிக்குச் சென்றது, அபிஷேக் பச்சனுடன் திருமணம் செய்து கொண்டது உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இந்த லாமெர் குடியிருப்பில் வசித்தபோது நடந்தவைதான். ஐய்வர்யாவின் பெற்றோர் இந்தக் குடியிருப்பில்தான் வசித்து வந்தனர். அவரின் அப்பா இறந்த பிறகு, அம்மா பிருந்தா ராய்க்கு இந்தக் குடியிருப்பு சரிப்படவில்லையாம். அவரைத் தங்களுடன் வசிக்கச் சொல்லி மகளும் மாப்பிள்ளையும் வற்புறுத்துகின்றனர். இந்த ஏற்பாடு தங்களின் மகள் ஆராதித்யாவுக்கு நல்லதாக இருக்கும் என்பது இருவரின் எண்ணம். ஆனால் பிருந்தா ராய் இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.