• சிறுநீர் சரியாகப் போகாமல் அவதிப்படுவோர் பிரண்டை துவையல் சாப்பிடலாம். பார்லியை கஞ்சி காய்ச்சி குடிக்கலாம், இதனால் நீர்தாரளமாக வெளி யேறும்.
• நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாழைப்பூ பொரியல் செய்து சாதத்தில் சேர்த்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
• பப்பாளிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் குடற் புழுக்கள் அழிந்து, மலத்துடன் வெளிப்படும்.
• முருங்கைப்பூவை பொரியல் செய்து சாப்பிட்டு வர கை, கால் மூட்டு வலி நீங்கும்.
• அஜீரண பிரச்னை உள்ளவர்கள் சீரகத்துடன் மிளகு சேர்த்து லேசாக வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். இதை சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணம் அகலும். நன்கு பசி வரும்.
• அன்னாசிப்பழச்சாறுடன், கருப்பட்டி பொடித்திட்டு பருகிவர, மூளை சீராக இயங்கும். முதியவர்களுக்கான ஞாபக சக்தியைப் பெருக்க இது எளிய இயற்கை மருந்து.
- உ.ராமநாதன்