சருமம் பொலிவுபெற...

வாரத்தில் இரண்டு முறை இளநீரை முகம்,  கழுத்து பகுதி,  கைகளில் பூசி 15 நிமிடம் வைத்திருந்து பின்னர் கழுவி விட  சரும நிறம் மாறும்.
சருமம் பொலிவுபெற...

• வாரத்தில் இரண்டு முறை இளநீரை முகம்,  கழுத்து பகுதி,  கைகளில் பூசி 15 நிமிடம் வைத்திருந்து பின்னர் கழுவி விட  சரும நிறம் மாறும்.

• பாதாம்  பருப்புகளைத் தோலுரித்து நன்றாக அரைத்து முட்டையின் வெள்ளைக் கருவையும் சில  சொட்டு எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து முகத்தில் தடவி ஊறிய பின் முகத்தை அலம்பினால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள்  மறையும்.

• புதினா மற்றும் எலுமிச்சைச்சாறு  கலந்து முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெறும். 

• பசும்பாலில் கசகசாவை ஒரு தேக்கரண்டி இரவில் ஊற வைத்து காலையில் நன்றாக அரைத்து தேய்த்து வர, முகத்தில் பொலிவு கூடும்.

• சந்தனம்,  ஜாதிக்காய் இரண்டையும் சம அளவு இழைத்து  முகத்தில் தடவி வர, பருக்கள் மறைந்து முகம் பளபளக்கும்.

• எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்கள் வெள்ளரிக்காய் சாற்றை  முகத்தில் தடவி  15 நிமிடம் வைத்திருந்து பச்சை பயறு மாவைக் கொண்டு முகம் கழுவி வர  முகத்தில் எண்ணெய் வழிவது 
சரியாகும்.
 - என். சண்முகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com