• வாரத்தில் இரண்டு முறை இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசி 15 நிமிடம் வைத்திருந்து பின்னர் கழுவி விட சரும நிறம் மாறும்.
• பாதாம் பருப்புகளைத் தோலுரித்து நன்றாக அரைத்து முட்டையின் வெள்ளைக் கருவையும் சில சொட்டு எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து முகத்தில் தடவி ஊறிய பின் முகத்தை அலம்பினால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மறையும்.
• புதினா மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெறும்.
• பசும்பாலில் கசகசாவை ஒரு தேக்கரண்டி இரவில் ஊற வைத்து காலையில் நன்றாக அரைத்து தேய்த்து வர, முகத்தில் பொலிவு கூடும்.
• சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் சம அளவு இழைத்து முகத்தில் தடவி வர, பருக்கள் மறைந்து முகம் பளபளக்கும்.
• எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்கள் வெள்ளரிக்காய் சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து பச்சை பயறு மாவைக் கொண்டு முகம் கழுவி வர முகத்தில் எண்ணெய் வழிவது
சரியாகும்.
- என். சண்முகம்