பெண்களின் வன்முறைகளுக்கு தீர்வு என்ன என்று என்னைக் கேட்டால், "பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி என்று நாம் பெண்களுக்குத்தான் அறிவுறுத்துகிறோம். இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் என்று ஆண்களுக்கு நாம் அறிவுறுத்துவதில்லை. சட்டத்தின் துணையோடு தண்டனை வாங்கி கொடுக்க முயற்சிப்பதை விட மன பக்குவம், பண்பு, அறியும் சக்தி ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்'' என்கிறார் பிரபல சிதார் கலைஞர் ரவி சங்கரின் மகள் அனுஷ்கா சங்கர்.