"இதுவரை நான் இந்தி படங்களை தவிர வேறு மொழி படங்களில் நடித்ததில்லை. ஒரு மலையாள படத்தில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளேன். தற்போது தெலுங்கில் தயாரிக்கப்படும் என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாற்றில் அவரது மனைவி பசவதாரகம் பாத்திரத்தில் நடிக்கும்போது, காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு படப்பிடிப்பு முடிவதும், தொழில் கலைஞர்கள் நேரத்தை வீணாக்காமல் திட்டமிட்டப்படி பணியாற்றுவதும் எனக்கு புது அனுபவமாக இருக்கிறது. பாலிவுட்டில் பெரும்பாலும் படப்பிடிப்பு நடிகர்களால் தாமதப்படுவதுண்டு. இங்குள்ள வர்கள் தொழிலில் காட்டும் அக்கறை வியக்க வைக்கிறது'' என்கிறார் பாலிவுட் நடிகை வித்யாபாலன்.