என் திருமண தகவல் உண்மையில்லை!
முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் ( 43), தன்னை விட இளையவரான ஆண் மாடல் ரோஹ்மன் சாவலை திருமணம் செய்ய போவதாக வந்துள்ள தகவலை மறுத்துள்ளார். ""தற்போதைக்கு சுஷ்மிதா திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இல்லை. வருங்காலத்திலும் திருமணம் செய்து கொள்வாரா என்பது சந்தேகம்தான். இப்போதைக்கு அவர் மனிதில் இருப்பது இதுதான். ஆனால் அவரது மனம் எப்படி மாறும் என்பது யாருக்குத் தெரியும்?'' என்று அவரது நெருங்கிய தோழியொருவர் கூறியுள்ளார்.
ஷகிலா வரலாற்று படத்தில் ஷகிலா!
90- களில் மலையாள படவுலகில் பிரபலமாக இருந்த ஷகிலாவின் வாழ்க்கையை "ஷகிலா' என்ற பெயரிலேயே திரைப்படமாக எடுத்து வரும் இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ், கதாநாயகியாக நடிக்கும் ரிச்சா சட்டா மூலம் படத்தின் போஸ்டரை அண்மையில் வெளியிட்டார். இது குறித்து ரிச்சா சட்டா கூறியதாவது, ""மக்களுக்கு தெரிந்ததைவிட ஷகிலாவின் வாழ்க்கை பல திருப்பங்களை கொண்டதாகும். அவரை அப்படியே நான் பிரதிபலிப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல என்பதால் இப்படத்தில் ஷிகிலாவும் நடிக்க இருப்பது கதையின் உண்மை தன்மையை பிரதிபலிப்பதாக அமையும்'' என்றார்.
என் சுயமரியாதையை பாதித்ததும் உண்டு!
பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர், "புரோக்கன்' என்ற தலைப்பில் புதிய டிவி தொடரை தயாரித்து வருகிறார். ""இதுவரை நான் தயாரித்த தொடர்களை விட இந்த தொடர் வித்தியாசமானது. இந்த தொடரின் கதை என்னுடைய மனதை மிகவும் பாதித்துள்ளது. ஆம், வாழ்க்கையில் பல துறைகளில் நான் வெற்றி கண்டிருந்தாலும், சில நேரங்களில் என் சுயமரியாதையை பாதித்த சம்பவங்களும் உண்டு. அதனால்தான் இந்த கதையை தேர்ந்தெடுத்தேன். உண்மையில் இது என்னுடைய முடிவு அல்ல. எங்கள் தயாரிப்பு குழுவினரின் முடிவுமாகும்'' என்கிறார் ஏக்தா கபூர்.
ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வு!
""சிறுவயது முதலே எனக்கு ஆஸ்துமா பிரச்னை உள்ளது. அப்போது முதல் இயற்கை முறையில் சிப்லா நிறுவனம் தயாரித்துவரும் இன்ஹேலரை பயன்படுத்தி வருகிறேன். இன்ஹேலரை பயன்படுத்துவதால் உடல் வளர்ச்சிக்கு பாதிப்பில்லை. ஆஸ்துமாவால் உங்கள் கனவுகள் நிறைவேறாமல் போக வாய்ப்பில்லை. என்பதால் இப்போது ஆஸ்துமாவைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சிப்லா நிறுவனத்துடன் இணைந்துள்ளேன். தாகம் ஏற்படும் போது தண்ணீர் அருந்துவது போன்று, மூச்சு பிரச்னை ஏற்படும்போது மட்டும் இன்ஹேலரை பயன்படுத்தினால் போதும்'' என்று கூறும் பிரியங்கா சோப்ரா இது தொடர்பான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
மீண்டும் படங்களில் நடிக்கும் தீபிகா படுகோன்!
ரண்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட தீபிகா படுகோன், மீண்டும் படங்களில் நடிக்க தயாராகிவிட்டார். திருமணத்திற்கு முன்பே அமில தாக்குதலுக்குள்ளான லட்சுமி அகர்வாலை பற்றிய வரலாற்று படத்தை தயாரிக்கும் மேக்னா குல் சாருக்கும், முதன் முறையாக கரண் ஜோகர் இயக்கத்தில் உருவாகும் "யே ஜவானி ஹை திவானி' என்ற படத்தில் நடிப்பதற்கும் ஒப்புதல் அளித்துள்ளதால், தேனிலவு முடிந்து திரும்பியதும் இவ்விரு படங்களிலும் நடித்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளார் தீபிகா படுகோன்.
பெண் விமான ஓட்டியாக நடிக்க பயிற்சி பெறுபவர்!
பிரபலமான தனிப்பட்ட மனிதர்களின் வரலாற்றைத் திரைப்படமாக தயாரிப்பது பாலிவுட்டில் பிரபலமாகியுள்ளது. கார்கில் போரின்போது மிக திறமையாக செயல்பட்ட இந்திய விமானப் படை பெண் விமானி குஞ்சன் சாக்ஸனா பற்றிய வரலாற்று படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், பெண் விமானியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக விரைவில் ஜான்விக்கு விமானம் ஓட்ட பயிற்சியளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.