மீண்டும் ஜானகி!

இந்தியத் திரைப்பட உலகில் குயில்களாக வலம் வந்தவர்களில் எஸ். ஜானகியும் ஒருவர். 1957 -இல் "விதியின் விளையாட்டு' படம் மூலம் அறிமுகமான ஜானகி,
மீண்டும் ஜானகி!

இந்தியத் திரைப்பட உலகில் குயில்களாக வலம் வந்தவர்களில் எஸ். ஜானகியும் ஒருவர். 1957 -இல் "விதியின் விளையாட்டு' படம் மூலம் அறிமுகமான ஜானகி, இதுவரை சுமார் 48 ஆயிரம் பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார். 2016-இல் மலையாள படம் ஒன்றில் "தாலாட்டு' பாடல் பாடியதுடன் , "இனி படங்களில் பாடப்போவதில்லை... பாடி அலுத்து விட்டது... ஓய்வு எடுக்கப்போகிறேன்'' என ஜானகி அறிவித்தார்.
 "அன்னக்கிளி உன்னைத் தேடுதே..' என்று கிராமிய பின்னணியில் பாடிய ஜானகியை கிராமிய இசை விடவில்லை. . கிராமத்து கதை பின்னணியில் உருவாகும் "பண்ணாடி' என்ற படத்தில் "உன் உசுரு காத்துல..' என்ற பாடலை சந்தோசம், செக்கப் பின்னணியில் இரண்டு பாடல்களாகப் பாடியுள்ளாராம். படத்தின் இசையமைப்பாளர் ராஜேஷ் ராமலிங்கம். பழனிவேலன் படத்தை இயக்குகிறார். ஜானகிக்கு, வயதானாலும் குரலில் நடுக்கமில்லை.. பிசிறில்லை என்கிறது திரைப்பட வட்டாரம். இன்னொரு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே' உருவாகிவிட்டது.
 - ரய்யான்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com