காதல் பூட்டு 

பாரீஸ் நகரில் சினே நதி மீது ஒரு நடை பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் உள்ள பக்கவாட்டு குறுக்குக் கம்பங்களில் 2008-ஆம் ஆண்டு முதல் ஒரு நூதன பழக்கம் தொடங்கியது.
காதல் பூட்டு 

பாரீஸ் நகரில் சினே நதி மீது ஒரு நடை பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் உள்ள பக்கவாட்டு குறுக்குக் கம்பங்களில் 2008-ஆம் ஆண்டு முதல் ஒரு நூதன பழக்கம் தொடங்கியது.

காதலர்கள் ஒரு பூட்டில் தங்கள் பெயரை எழுதி அதனை பாலத்தில் உள்ள குறுக்குக் கம்பத்தில் பூட்டி, சாவியை ஓடும் நிதியில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றனர்.

பூட்டிய பூட்டு போல் தங்கள் காதல் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் இருவரும் எந்தக் காரணத்தைக் கொண்டும் பிரிந்துவிடக் கூடாது என்றும் சாவியை ஆற்றில் போட்டனர். இந்தப் பழக்கம் தற்போது உலகின் பல நாடுகளிலும் பரவியுள்ளது.

குறிப்பாக அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, சீனா உள்ளிட்டப் பல நாடுகளிலும் இதே முறையைப் பின்பற்றுகின்றனர் காதலர்கள்.
 - ராஜிராதா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com