ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்து வெளியாகியுள்ள இரண்டாவது தமிழ்ப்படமான "சொல்லிவிடவா', கன்னடத்திலும் "பிமேர பரஹா' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இது ஐஸ்வர்யாவுக்கு கன்னடத்தில் முதல் படமாகும். "தேசபக்தி கலந்த படங்களிலேயே நடித்து வந்த என் தந்தை, இப்படத்தில் காதல் கலந்த பத்திரிகையாளர் பாத்திரத்தை எனக்காக உருவாக்கியிருந்தாலும், இது அவருடைய படம்தான்'' என்கிறார் ஐஸ்வர்யா அர்ஜுன்.