ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாரிக்காக பயன்படுத்தப்படும் யானை ஒன்றை 8 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். அந்தப் பகுதிக்கு சுற்றுலா வந்த அமெரிக்கப் பயணிகள் இந்தச் சம்பவத்தைப் பார்த்துள்ளனர். பெயர் தெரியாமல், "எண் 44' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ள அந்த யானையை மீட்டு புனர்வாழ்வுக்காகவும் மருத்துவச் சிகிச்சைக்காகவும் அனுப்ப வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
- அருண்