தானியக் கஞ்சி
கோதுமை, பார்லி, சோளம், கம்பு, கடலை, சிறிது அரிசி போன்ற பல்வேறு தானியங்களை வறுத்து அரைத்து மாவாக்கி, கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்க வேண்டும். இந்தக் கஞ்சியைக் குடிப்பதால் நம் உடலுக்குத் தேவையான சத்துகளைப் பெறலாம். இது எளிதில் ஜீரணமாகும். தனித்தனியாக ஒவ்வொரு தானியங்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், அனைத்தையும் சேர்த்து பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.
- அ.குமார்