நொய்டாவில் உள்ள பென்னட் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் சென்ற உலக அழகி மானுஷி சில்லார் மாணவர்களிடையே பேசும்போது, ""117 போட்டியாளர்களுடன் உலக அழகிப் போட்டியில் பங்கேற்றதை ஒரு பெரிய விஷயமாகக் கருதவில்லை. ஒரே குறிக்கோளை உடைய என் சக போட்டியர்களைச் சந்தித்தபோது, ஒருவருக்கொருவர் ஏராளமான உதவிகள் செய்து கொண்டோம். ஒரே கனவை உடையவர்களுடன் இருந்தபோது குடும்பம் போன்ற ஓர் உணர்வே ஏற்பட்டது'' என்று கூறியிருக்கிறார்.