* ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை, ஒரு தேக்கரண்டி நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.
* உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு தேக்கரண்டி ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.
* அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.
* சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.
* மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
* துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.
* மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.
- முத்தூஸ்