இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-8

இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்கள் மட்டுமல்லாமல், நகரங்களிலும் மொட்டைமாடி தோட்டங்களும் பெருகி வருகின்றன.
இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-8

இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்கள் மட்டுமல்லாமல், நகரங்களிலும் மொட்டைமாடி தோட்டங்களும் பெருகி வருகின்றன. அதனால் விவசாயம் செய்பவர்களுக்கு இயற்கை உரம் பெரிதும் தேவைப்படுகிறது. எனவே, வீட்டிலிருந்தபடியே இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்யலாம். நல்ல வரவேற்பு இருக்கும் என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்.
 அசோலா: இது ஒருவகையான இயற்கை உரம். பாசி போல் இருக்கும். ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனமாகவும், செடிகளுக்கு உரமாகவும் உபயோகிக்கலாம். இதற்கு வெயில் தேவையில்லை. நிழலாக இருந்தாலே போதும். இதற்கு மாட்டுச் சாணம், செம்மண், தண்ணீர், ஒருவகையான விதை உபயோகப்படுத்தப்படுகிறது.
 மீன் அமிலம்: விலை மலிவாக கிடைக்கும் மீன் அல்லது மீன் மார்க்கெட்டில் இருக்கும் மீன் கழிவுகளை உபயோகப்படுத்தி மீன் அமிலம் தயாரிக்கப்படுகிறது. டிரம், மீன், கருப்பட்டி தேவையானால் வாழைப்பழம். ஒரு ஏக்கருக்கு 200 முதல் 300 மி.லி. தண்ணீரில் கலந்து பயன்படுத்தினாலே போதுமானாது. இது நல்ல வீரியம் உள்ள இயற்கை உரம்.

அமிர்த கரைசல்: இது மாட்டுச் சாணம், கோமியம், கடலைப் புண்ணாக்கு, வெல்லம் இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை உரம்.
 ஜீவாமிர்தம்: மாட்டுச் சாணம், கோமியம், கருப்பட்டி, பயிறு மாவு போன்றவற்றை உபயோகப்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. இந்த உரம் செடிகளுக்கு மிக்க ஊட்டச்சத்தை அளித்து செழிப்பாக வளரச் செய்கிறது.
 முட்டை அமிலம்: முட்டை அல்லது முட்டை ஓட்டிலிருந்து தயாரிக்கப்படும் இந்த உரம். பூச்செடிகளுக்கு மிகவும் பயன்படுகிறது.
 பஞ்ச காவ்யம்: தயிர், நெய், சாணம், கோமியம், பால் இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த உரத்தை பஞ்சகாவ்யம் எனப்படுகிறது. இது செடிகள் பூஞ்சை தொற்று ஏற்படாமல் தடுத்து நல்ல வளமாக வளரச் செய்கிறது.
 தேமோர் கரைசல்: இது தேங்காய் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது, இது பூச் செடிகள் மற்றும் மாமரத்திற்கு மிகவும் உபயோகமானது. மாமரம் பூ எடுக்கும் தருவாயில் மரத்தின் மீதும் தெளிக்கப்படும் இந்த உரம், பூக்கள் உதிராமல் இருக்கவும், நிறைய காய்கள் பிடித்து விளைச்சல் அதிகரிப்பதற்கும் இந்த உரம் பயன்படுத்தப்படுகிறது.
 அரப்பு மோர் கரைசல்: மோரில் அரப்பு இலையை அரைத்து அதனை பதப்படுத்தி தயாரிக்கப்படும் இந்த உரம். செடிகளை பாதிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தக் கூடியது.
 மண் புழு உரம்: மண் புழு உரத்தில் 3 வகை உள்ளது. தொட்டி முறை, குவியல் முறை, சில்க் பாயல் சீட் முறை. இது வீட்டில் கிடைக்கும் காய்கறி கழிவுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் உரம். அல்லது விவசாயம் செய்பவர்கள் அவர்கள் தோட்டத்தில் உள்ள செடிகளின் கழிவுகளை வைத்து தயார் செய்யலாம்.
 மேலே சொன்ன அனைத்து வகை உரங்களையும் தயாரிக்க ஒரு நாள் அல்லது இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் அரசு சார்பில் நடத்தப்படுகிறது. அதில் கலந்து கொண்டு உரம் தயாரிக்க கற்றுக் கொண்டு, வீட்டில் இருந்தபடியே இத்தொழிலை செய்யலாம். நல்ல லாபம் கிடைக்கும்.
 இதற்கான பயிற்சி வகுப்புகள் நடக்குமிடம்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ வேளாண்மை அறிவியல் பல்கலைக் கழகம், காட்டுப்பாக்கம், காட்டாங்கொளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம், தொலைபேசி : 044- 27452371 மற்றும் விவேகானந்தா வேளாண்மை பயிற்சி மையம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக பயிற்சியளிக்கப்படுகிறது.
 - ஸ்ரீ
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com