அழகு சாதனங்கள் தயாரிக்கவும், புதிய மருந்துகளை கண்டு பிடிப்பதற்காகவும் விலங்குகளை பரிசோதனைக்கு உட்படுத்துவது, அதன் உறுப்புகளை பயன்படுத்தும் முறை மாறி வருகிறது. இருப்பினும் தேவையில்லாமல் விலங்குகளை கொல்வது முற்றிலும் தடை செய்ய வேண்டும் இதுபோன்ற பரிசோதனைகளை உலகம் அனுமதிக்கக் கூடாது என்ற முடிவெடுக்கும் காலம் நெருங்கிவிட்டது என்பதை வலியுறுத்தி பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், உலக விலங்குகள் தினத்தன்று 8 மில்லியன் நபர்களின் கையெழுத்தை சேகரித்து ஐக்கிய நாட்டு தலைமை அலுவலகத்தில் நடந்த சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டபோது சமர்ப்பித்துள்ளார்.