மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் இயக்குநர் பூஷன் பட்டேலின் த்ரில்லர் படமான "அதாத்' என்ற படத்தில் நடிக்க வந்துள்ளார் பிபாஷா பாசு. "நடிகை என்ற முறையில் கதாபாத்திரமும், கதையும்தான் முக்கியமே தவிர படம் முழுக்க என்னுடைய கதாபாத்திரம் இருக்க வேண்டுமென்பது எனக்கு முக்கியமல்ல. "அதாத்' படத்தில் லண்டன் காவல்துறையில் பணிபுரியும் உளவாளி நேஹாசிங் என்ற பாத்திரத்தில் நடிப்பதோடு, இப்படத்தில் என்னுடைய கணவர் கரண் சிங் குரோவரும் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவலாகும்'' என்கிறார் பிபாஷா பாசு.