விளையாட்டுத் துறையில் பிரபலமான ஆண்களும், பெண்களும் அதே துறையில் உள்ளவர்களை திருமணம் செய்வது சகஜமாகிவிட்டது. இந்த வரிசையில் இந்திய பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் (26) பாட்மின்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப் (32) திருமணம் முடிவாகியிருக்கிறது. டிச.16-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. "2005-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் புல்லேலா கோபிசந்திடம் நான் பயிற்சி பெறும்போது காஷ்யப்பும் அவரிடம் பயிற்சி பெற வந்தார். 2012-ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளின்போது இருவருமே தேர்வு செய்து அனுப்பப்பட்டோம். அப்போது எங்களுக்குள் மலர்ந்த காதல், இப்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளும் முடிவை கண்டுள்ளது'' என்று சாய்னா தெரிவித்திருக்கிறார்.