திருமணத்தை அறிவித்தார் சாய்னா

விளையாட்டுத் துறையில் பிரபலமான ஆண்களும், பெண்களும் அதே துறையில் உள்ளவர்களை திருமணம் செய்வது சகஜமாகிவிட்டது.
திருமணத்தை அறிவித்தார் சாய்னா

விளையாட்டுத் துறையில் பிரபலமான ஆண்களும், பெண்களும் அதே துறையில் உள்ளவர்களை திருமணம் செய்வது சகஜமாகிவிட்டது. இந்த வரிசையில் இந்திய பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் (26) பாட்மின்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப் (32) திருமணம் முடிவாகியிருக்கிறது. டிச.16-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. "2005-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் புல்லேலா கோபிசந்திடம் நான் பயிற்சி பெறும்போது காஷ்யப்பும் அவரிடம் பயிற்சி பெற வந்தார். 2012-ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளின்போது இருவருமே தேர்வு செய்து அனுப்பப்பட்டோம். அப்போது எங்களுக்குள் மலர்ந்த காதல், இப்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளும் முடிவை கண்டுள்ளது'' என்று சாய்னா தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com