தலைக்கு குளித்தவுடன் ஈரமாக உள்ள கூந்தலை சீவக் கூடாது. ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவினால் முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சீப்பை கொண்டு சீவினால் முடியானது கொத்தாக வேரோடு வந்துவிடும்.
தலை சீவும் போது மண்டை ஓட்டில் நன்கு பதியும்படி சீவ வேண்டும். கூந்தலும், தலைச்சருமமும் ஒன்றல்ல. ஆகவே தலைச்சருமத்தில் நன்கு படும்படி சீவினால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க்கால் தூண்டப்பட்டு முடி நன்கு வளரும். இவ்வாறு தினமும் செய்தால் கூந்தலானது நன்கு ஆரோக்கியமாக வளரும்.
கூந்தலை முதலில் சீவ ஆரம்பிக்கும்போது கூந்தலின் முனையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் கூந்தலில் முடிச்சுகளானது முனையிலேயே அதிகமாக இருக்கும். ஆகவே முதலில் இந்த முடிச்சுகளை அகற்றிப் பின் ஆரம்பத்தில் இருந்து சீவினால் கூந்தல் உதிராமல் இருக்கும். இல்லையென்றால் கூந்தல் வேரோடு தான் வரும்.
கூந்தலை இறுக்கமாக கட்டக்கூடாது. நிறையபேர் இந்த மாதிரியே கூந்தலை கட்டுகின்றனர். அதுபோன்று கூந்தலை போனி டைல் போடக்கூடாது. அப்படி போட்டால் முடியானது பிளவுபட்டு வளர்ச்சி தடைப்படும்.