நூல் புதிது!

கல்விச்செல்வமே செல்வம், தேடித் தேடி, நினைவுச்சின்னம் ஆகிய முத்தான மூன்று கதைகளையும்,
நூல் புதிது!

முக்கனிகள் 
ஆசிரியர்: புலவர் உதயை மு.வீரையன்
பக்கம்: 134; விலை: ரூ.102.
கல்விச்செல்வமே செல்வம், தேடித் தேடி, நினைவுச்சின்னம் ஆகிய முத்தான மூன்று கதைகளையும், முக்கனிகளாய் தித்திக்கும் வண்ணம் பயனுள்ள கருத்துகளுடன் வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். மாணவர்களே கதை மாந்தர்களாக இருப்பதால், கதையைப் படிக்கிற நாமும் மாணவர்களாகவே மாறிவிடுகிறோம்! (வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை- 17; போன்: 044-24345641).  

கருணும் காட்டுப்பூச்சியும் (சிறுவர்களுக்கு)
ஆசிரியர்: ஸ்ம்ரித்திராம்
பக்கம்: 176; விலை: ரூ.130.
தீய சக்திகளாக விளங்கும் காட்டுப்பூச்சி, முதலை மோச்சியான், முட்டைக்கண் ஆந்தை ஆகியோர் செய்யும் கொடுமைகள், அவற்றுடன் போராடும் வீர இளைஞன் கருணின் சாகசங்கள் அடங்கிய நாவல். தொடக்கம் முதல் முடிவு வரை விறுவிறுப்பான நடையும், கதைக்கான சித்திரங்களும் மனதைக் கவர்கின்றன! (வெளியீடு: சிவாலயம், 14,கைலாஷ் நகர் முதல்தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி-605008).

தாடி முடி ரகசியம்  
(முட்டாள் மேதாவி கதைகள்)
ஆசிரியர் : நண்டுமாமா
பக்கம்: 80; விலை: ரூ.55.
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் 25 நகைச்சுவை கதைகள் அடங்கிய நூல். பெரியவர்கள் கதைகளைப் படித்து சிறுவர்களுக்குக் கூறி மகிழ்விக்கலாம். கேட்ட கதைகளாக இல்லாமல் புதிய கதைகளாக இருப்பது நூலின் சிறப்பு. ஆட்டுக்கு அலங்காரம் கதை ஒரு உதாரணம்! (வெளியீடு: அருள்மொழி பிரசுரம், ஸ்ரீவாரி பிளாட்ஸ், 23/11, கவரைத் தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை-15; போன்: 044-24890151).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com