ஆல மரத்தின் பிள்ளைதான்
ஆலம் விழுது என்பதாம்!
ஆலம் விழுது வளர்ந்துமே
அருகில் ஊன்றி நிற்குமாம்!
முதுமை யான பெருமரம்
முறிந்தி டாமல் இருக்கவே
அதனைத் தாங்கிக் கொள்ளுமாம்!
அருமைப் பிள்ளை விழுதுமே!
அருமை பெற்றோர் முதுமையை
அடையும் போது பிள்ளையும்
அருகில் வைத்தே காக்கணும்
ஆலம் விழுதைப் போலவே!
-புலேந்திரன்