• "தாத்தா,....எப்படித் தாத்தா நீங்க நூறு வயசு வரைக்கும் வாழறீங்க...?''
"அதுவா?....., நான் 1917இல் பிறந்ததுதான்!"
சு.நாகராஜன், பறக்கை.
• "என்னடா இது?..... சாப்பாட்டைச் சாப்பிடாம அப்படியே கொண்டு வந்திருக்கே?''
"எங்க "மிஸ்' வரலேம்மா.... அதான் சாப்பிடலே''
"உங்க மிஸ் மேலே அவ்வளவு பாசமா?''
"இல்லேம்மா...,டிபன் பாக்ûஸ எப்பவும் அவங்கதான் திறந்து கொடுப்பாங்க''
எம்.ஏ.நிவேதா, அசூர்.
• "மனசு ரொம்ப பாரமா இருக்குடா...''
" ஏன்டா?''
"வாத்தியார் ஓவரா மனக்கணக்கு போடச் சொல்றாரே''
ஆர். சீதாராமன், சீர்காழி.
• "ரப்பர் அழிக்கவே மாட்டேங்குதுடா''
"அழியாப் புகழ் பெற்றது போலிருக்கு''
ராஜாமணி,
அமுதசுரபி மெஸ் மெயின் ரோடு,
விக்கிரமசிங்கபுரம்-627425.
• "காட்டுல எனக்கு எதிரில் ஒரு சிங்கம் வந்திச்சு!....கையிலே இருந்த வாட்டர் பாட்டிலாலே ஒரே அடி!....ஓடியே போயிடுச்சு!''
"தெரியுண்டா''
"அதெப்படி உனக்குத் தெரியும்?''
"சிங்கத்தோட முதுகை நான் தடவிப் பார்த்தேன்.... ஈரமா இருந்திச்சு''
எம்.அசோக்ராஜா, திருச்சி.
• "இப்போதானே ஒரு சாக்லேட் குடுத்தேன்....அதுக்குள்'ளே இன்னோரு சாக்லேட் கேக்குறியே...''
"முதல் சாக்லேட்டை சப்பிச் சாப்பிடாமே "டபக்;னு முழுங்கிட்டேம்மா''.
உ.அமீரா அலிமா,
116/ 63, கல்வத்து நாயகம் தெரு,
கடையநல்லூர்-607751.