• சுதந்திரமுள்ள இடந்தான் எனது நாடு. சுதந்திரமில்லாத நாடு காற்றில்லாத வீடு.
- ஓர் அறிஞர்
• சுதந்திரம் என்றால் என்ன? அது தேவையின் எல்லை.
- யாரோ
• சுதந்திரமே வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை.
- சுவாமி விவேகானந்தர்
• சுதந்திரமே! உன் சன்னிதானத்தில் நித்ய இன்பம் ஆட்சி புரிகிறது. செழுமை உன்னைப் பின் பற்றி நடக்கிறது. உன் முன்னர் வறுமை கூட சந்தோஷம்
தருவதாய் இருக்கிறது.
- ஓர் அறிஞர்.
• சுதந்திரமில்லாமல் ஒருவன் சந்தோஷமாகவும் இருக்க முடியாது. யோக்கியனாகவும் இருக்க முடியாது.
- ஜீனியஸ்
• மனிதன் பயமில்லாமல் வாழவேண்டும். அதற்கு சுதந்திரம் தேவை!
- வினோபா பாவே
• எவன் ஒருவன் தன் தற்காலிக நலனுக்காகச் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கிறானோ அவன் ஒரு பொழுதும் சுதந்திரம் பெறத் தகுதியுடையவனல்ல.
- பிராங்ளின்.
தொகுப்பு: ஆர்.மகாதேவன்