குறள் பாட்டு
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்.
-திருக்குறள்
நல்ல பண்பு உள்ளவர்
பயனில்லாததைப் பேசினால்
சீரும் சிறப்பும் போய்விடும்
இழிந்த நிலை நேரிடும்
மதிப்பு உள்ள மனிதரும்
தேவையற்றதைப் பேசினால்
மதிப்பிழந்து போவார்கள்
மற்றவர் தூற்றிப் பேசுவர்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்