வளர்கொடை எது எது?
பற்பல உள உள!
வான்தோய் பசுங்குடை
மரம் அதில் ஒன்றே!
கிளர்..கிளர்! மேல்மண்;
குழிஅமை தேங்கநீர்!
தழைஎரு ஆட்டெரு
மாட்டெரு சிறிதிடு!
இடு!இடு! இடு! விதை!
மா, பலா, பழவிதை!
இடு! நடு! ஆலின்...
கொம்பும் வளரும்!
மடுஉள கரைஎலாம்...
மரம்நடு! வளர்கொடை...
...மரம்பல! பழம்...பூ!
மண்டிடக் குவிப்பாய்!
ஏன்?...ஏன்? ஏன்?...இவை
வளர்த்திடல் வேண்டும்?
ஏன் எனில் புவிக்கனல்
குறையுமே! வளிநலம்!
வான்மழை பொழிந்திடும்!
வண்ணப் புள்இனம்...,
வாழும்!... இசைதரும்!
ஆல்வகை: போதினில்
மேதினி பயன்உறும்!
மாமுகில் ஈர்க்கும்!
பாதை அழகுற
பூக்கள் மிளிரும்!
காதினிக் கும்இசை!
கண்விருந் தாம்மரம்!
காதப் பயணக்
களைப்பும் மாற்றுமே!
உழவே தலை எனும்
குறள்வழி நயம்செய்!
மனதினை ஈர்க்கும்
புன்னை வனம்செய்!
வாச மலர், காய், இலை
மரங்களை ஆக்குவோம்!
பசுமை விருந்தே!
பார்ப்பவர் கட்கெலாம்!
புழக்கடை வளர்த்திடு!
பொந்தன் வாழை
பல்வகைக் காய்கறிச் - செடி
கொடிகளை நடுவாய்
பறித்திடு! பல்வகைக்
கூட்டுடன் பொறியல்
சமைத்திடு! சுவைத்திடு!
பசிதனை ஆற்றிடு!
மழைவர,,உழவர் உழுதிட,
உலகமும் உய்ந்திடும்!
உயர்மலை, கடற்கரை,
சாலைகள் "ஓரம்',
பழவனம் ஆகிடப்
பன்மரம் வளர்ப்போம்!
பழைய எருவிதை,
களிமண் பிசைந்த
பழமரம் விளை "விதைப்
பந்துகள்'' ...உலர்த்தியே,
பாரெலாம் விளைப்போம்: வெம்மை தணியுமே!
-புலவர் சி. பாண்டுரங்கன்