ஆற்றங் கரையில் வீற்றிருக்கும் பிள்ளையார் - நம்
யாவருக்கும் பிரியமான பிள்ளையார்
ஞானப்பழம் தன்னைப் பெற்ற பிள்ளையார் - சுவாமி
நாதனுக்குத் தமையனான பிள்ளையார்
தோப்புக்கரணம் போடவைக்கும் பிள்ளையார் - வரும்
தோஷங்களை ஓடச்செய்யும் பிள்ளையார்
மோதகத்தை விரும்பி உண்ணும் பிள்ளையார் - சிறு
மூஷிகத்தில் ஏறிவரும் பிள்ளையார்
ஏ.சி. போட்டுப் பூட்டிடாமல் இருக்கிறார் - நாம்
ஈஸியாக அணுகுகின்ற பிள்ளையார்
வேண்டுபவர் வேண்டுவன நன்றெனில் - வெகு
விரைவினிலே கிடைக்கப்பண்ணும் பிள்ளையார்
சித்திபுத்திப் பிள்ளையாரின் சுழியினைப் - போட்டுச்
செய்யும் தொழில் வெற்றி இது நிச்சயம்
ஆனைமுகப் பிள்ளையாரை வணங்குவோம் - நாம்
அனைவருமே வளங்களோடு வாழுவோம்!
- கி.ரா.திருமலையப்பன், திண்டுக்கல்.