தந்திரம்!

நரி தந்திரங்கள் மிக்கது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஒரு முறை அதற்கு ரொம்ப கர்வம் ஏற்பட்டது.
தந்திரம்!

நரி தந்திரங்கள் மிக்கது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஒரு முறை அதற்கு ரொம்ப கர்வம் ஏற்பட்டது. தான் மிகவும் கெட்டிக்காரன் நிறைய்ய தந்திரங்கள் தெரிந்தவன் என்று பெயர் வாங்கிவிட்டதாம்! ஒருநாள் காட்டில் ஒரு பூனையை அது சந்தித்தது! 
"இப்ப ஒரு நாய் எதிர்த்தாப்போல வந்தா நீ என்ன செய்வே?'' ன்னு பூனை கிட்டே நரி கேட்டது. 
அதற்கு பூனை, "எனக்கு தெரிஞ்ச ஒரு தந்திரத்தை வெச்சு நான் என்னைக் காப்பாத்திக்குவேன்!''
"என்னது உனக்கு ஒரு தந்திரம்தான் தெரியுமா? எனக்கு நாற்பது தந்திரம் தெரியும். எந்த ஆபத்து வந்தாலும் தப்பிச்சுக்குவேன்!'' என்று ஜம்பமாகச் சொன்னது! 
இப்படி இவங்க பேசிக்கிட்டு இருக்கும்போது வேடர்கள் ஒரு வேட்டை நாய்களுடன் வந்துகொண்டிருந்தனர். பூன தன் ஒரே மரமேறும் தந்திரத்தை உபயோகித்து மரமேறித் தப்பித்துக் கொண்டது! 
நாற்பது தந்திரங்கள் தெரியும் என்று ஜம்பம் பேசிய நரி எந்தத் தந்திரத்தையும் பயன்படுத்தத் தெரியாமல் மாட்டிக் கொண்டது!
நீதி: வீண்பெருமை பேசேல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com