விடுகதைகள்

கயிற்றைக் கட்டி வீசினால் ஒற்றைக்காலால் நடனம் ஆடு வான்...
விடுகதைகள்

1. தேனைச் சுமப்பான், தேளாகவும் கொட்டுவான்...
2. கயிற்றைக் கட்டி வீசினால் ஒற்றைக்காலால் நடனம் ஆடு வான்...
3. நெடுக வளர்ந்தவனுக்கு நிழல் இல்லை...
4. பார்க்கக் கல்லானவன், கடிக்க இனிமையானவன்...
5. கண்ணுக்குக் கருப்பழகி, நாவுக்கு இனிப்பழகி...
6. நாக்கு இல்லாதவன், நல்லது சொல்வான்...
7. கடுகு மடிக்க இலை இல்லை, யானை படுக்க நிழல் உண்டு..
8. ஏறாத மரத்தினிலே, ஏழாயிரம் மணிகள்...
9. எரிவான், மணப்பான், உற்சாகம் கொடுப்பான்...
- ரொசிட்டா
விடைகள்:
1. தேனீ
2. பம்பரம்
3. தார் ரோடு
4. கற்கண்டு
5. நாவல் பழம்
6. புத்தகம்
7. சவுக்கு மரம்
8. கேழ்வரகு கதிர்
9. ஊதுவத்தி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com