""கம்ப ராமாயணத்தை எழுதியது கம்பர்....இதிலிருந்து என்ன தெரிகிறது?''
""நம்ம ராமாயணத்தை எழுதும்போது நம்மோட பெயரை முன்னால் சேர்த்துக் கொள்ள வேண்டும்னு தெரிகிறது சார்''
பி.யோகநாதன், 43/16, டாக்டர் அம்பேத்கார் தெரு,
காந்திநகர், கிழக்கு தாம்பரம் - 600059.
""உன் பெயரென்ன?''
""துரை''
""உங்கப்பா பேரு?''
""அப்பாதுரை''
""அண்ணன் பேரு?''
""அண்ணாதுரை''
""தம்பி பேரு?''
""தம்பிதுரை''
கே.ஆர்.உதயகுமார், சென்னை.
""நடக்கிற கதையா ஒண்ணு சொல்லு''
""ஒர் ஊர்லே ஒரு செருப்பு இருந்துச்சாம்!''
""?????''
கே.அருணாசலம், தென்காசி.
""உனக்கு ரெண்டு இட்லி கொடுக்கறேன்....அந்த இரண்டு இட்லியையும் நீ சாப்பிட்டுட்டால் மிச்சம் என்ன இருக்கும்?''
""சட்னி இருக்கும்! டீச்சர்!''
பி.வி.அப்ஜித், 103, மெட்ரோஜோன் முதல்மாடி,
44 பிள்ளையார் கோயில் தெரு, சென்னை-600040.
""என்னது?....விரதம் இருக்கும் நாளில் உங்கப்பா லஞ்ச் பாக்ஸ் எடுத்துக்கிட்டுப் போவாரா?''
""ஆமா!.....காலி லஞ்ச் பாக்ஸ்!''
பர்வதவர்த்தினி, சென்னை.
""என்னடா "நோக்கியா, சாம்சங், ஆப்பிள், மைக்ரோமாக்ஸ், ரெட்மி' னெல்லாம் எழுதிக்கிட்டு இருக்கே?''
""மனித செல்களுக்கு எடுத்துக்காட்டு எழதிக்கிட்டி இருக்கேன்பா''
எஸ்.அருள்மொழிசசிகுமார்,
கம்பைநல்லூர்.