(பொருட்பால் - அதிகாரம் 48 - பாடல் 5 )
பீலிபெய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டம்
சாலமிகுத்துப் பெயின்.
-திருக்குறள்
மயிலிறகு மெல்லியது
என்று எண்ணி அதனையே
அதிகமாக வண்டியில்
ஏற்றிவிட்டால் தாங்காது
பாரம் அதிகம் ஏற்றினால்
வண்டி அதனைத் தாங்காது
அச்சு ஒடிந்து போய்விடும்
அளவை என்றும் அறிந்திடு!
-ஆசி.கண்ணம்பிரத்தினம்