அன்புக்கு விலையில்லை! அதைத் தருவதுதான் பெறுவதற்கு வழி! தந்தவருக்கும் லாபம்! பெற்றவருக்கும் லாபம்!
- புத்தர்
கொஞ்சம் பேசி, நிறையக் கேட்டு, அதிகம் பகிர்வதே அனுபவம்.
- பெர்னார்ட்ஷா
பிறருக்கு உதவு! கடவுள் உனக்கு கடன்காரனாகிவிடுவார்!
- எமர்சன்
தண்டனை கொடுக்கத் தாமதம் செய்! ஆனால் மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூடச் செய்யாதே!
- அன்னை தெரசா
வெளிச்சத்தில் தனியாக நடப்பதைவிட இருளில் ஒரு நண்பரின் துணையோடு நடப்பது சிறந்தது! - ஹெலன் கெல்லர்
பயம் எதிரியை செயல்பட வைக்கும்! நம்பிக்கை கடவுளை செயல்பட வைக்கும்!
- ஜோயல் ஆஸ்டீன்
நல்ல காரியங்களை நாமாகத் தேடிச் செய்ய வேண்டும்.
தெரிந்ததைத் தெரியும் என்றும், தெரியாததைத் தெரியாது என்றும் சொல்வதுதான் அறிவு.
- கன்பூஷியஸ்
மரங்களில் ஏராளமான பழங்கள் உள்ளன. விதைகளில் ஏராளமான மரங்களும் உள்ளன.
- இந்தியப் பொன்மொழி