இந்திய நாடு எம் நாடே
இயற்கை வளங்கள் நிறை நாடே!
முந்தையர் வளர்த்த பெருநாடே
மும்மதம் போற்றும் தனிநாடே!
வடக்கே இமயம் அரணாகும்!
வாடைக்காற்றின் தடுப்பாகும்!
தடுக்கும் எதிரியை! அது நாளும்!
தவழும் ஆறுகள் உருவாகும்!
கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா!
கடல்போல் ஆறுகள் வரும் நித்தம்!
எங்கும் பசுமை பயிர் வளரும்!
இந்திய நாட்டின் நலன் பெருகும்!
வங்கம், அரபி, இந்துமாகடல்கள்!
எங்கள் நாட்டின் காவல் அரண்கள்!
பொங்கி மழையை என்றும் தருமே!
புனலாய் மாறி பூமியில் விழுமே!
மதமும், ஜாதியும் பற்பலவாம்!
மக்கள் மனமோ ஒற்றுமையாம்!
இதயம் எங்கும் ஓர் தேசம்!
இந்திய நாடு ஓர் நாடாம்!
- ரமண ராஜசேகர், காரைக்குடி.