நட்பு ஆராய்தல்
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
-திருக்குறள்
நல்ல குடும்பத்தில் பிறந்தவர்
நல்ல சிந்தனை கொண்டிருப்பர்
பழிச்சொல் வந்திடக்கூடாதென்று
பயந்து பயந்து வாழ்ந்திருப்பர்
அப்படிப்பட்டவர் நட்பினை
அடைய முயற்சி செய்ய வேண்டும்
எதைக் கொடுத்தும் அவரது
நட்பைப் பெற்றிட வேண்டுமே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்