கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
-திருக்குறள்
தேவையான நேரத்தில்
மழை பெய்யாமல் போய்விடும்
மழை பெய்யாமல் பொய்த்துவிட்டால்
விளைச்சலின்றிப் பஞ்சம் வரும்
பஞ்சம் வந்து வருத்திடும்
நேரத்தில் பெரிய மழை வரும்
வருந்துகின்ற மக்களை
வாழவைக்க வளம் தரும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்