(பொருட்பால் அதிகாரம் - 40, பாடல் - 5)
உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லாதவர்.
-திருக்குறள்
செல்வம் உள்ளவர் முன்னாலே
செல்வம் இல்லாத ஏழைகள்
தாழ்ந்து பணிந்து நின்றுதான்
பொருளைக் கேட்டுப் பெறுவார்கள்
படித்தறிந்த பெரியோரிடம்
பணிந்து கல்வி கற்றவர்கள்
ஞானம் பெற்று வாழ்வார்கள்
கற்காதவர்கள் தாழ்ந்தவர்கள்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்