வாய்மை
(அறத்துப்பால் - அதிகாரம் 30 - பாடல் 5)
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை.
-திருக்குறள்
உள்ளத்தில் உண்மை கடைப்பிடித்து
வாயால் நன்மை மொழி பேசி
நயமான வாழ்க்கை நடத்துவதே
நல்ல வாழ்வின் அடிப்படை
நயமான வாழ்க்கை என்பது
மனத்தூய்மை வாய்மை காப்பதுதான்
தவமும் தானமும் செய்வதை விட
நயமான வாழ்க்கை நல்வாழ்வே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்