• நூறு அறிவுரைகள் சொல்வதைக் காட்டிலும் ஒன்றைக் கடைப்பிடித்துக் காட்டுவது சிறந்தது!
- கன்பூஷியஸ்
• மற்றவர்களை அன்பால் மகிழச் செல்வதே ஒருவன் பெற்றிருக்கும் செல்வங்களிலேயே மேலான செல்வம்
- தாகூர்
• செயலை விதையுங்கள்!...குணம் உண்டாகும்! குணத்தை விதையுங்கள்!....எதிர்காலம் உண்டாகும்!
- போர்டுமேன்
• இன்பம் நிலையில்லாதது!...பனித்துளியைப் போன்றது! அது சிரிக்கும்போதே உலர்ந்துவிடும்!
- தாகூர்
• இளமையில் பெரியவர்களுக்குக் கீழ்ப்படிகிறோம்!...வயதானபிறகு சூழ்நிலைக்குக் கீழ்ப்படிகிறோம்!
- சிரில்
• மனத்திருப்தி என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம்! ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை!
- சாக்ரடீஸ்
• ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பு இல்லாவிட்டால் அந்த ஆற்றல் மதிப்பற்றுப் போய்விடும்!
- நெப்போலியன்
• இதயத்தைச் சுத்தப்படுத்திவிட்டு இறைவனைக் கூப்பிடு! நிச்சயம் வருவார்!
- பைபிள்
தொகுப்பு : அ. கருப்பையா, பொன்னமராவதி.