பொன்மொழிகள்! 

நூறு அறிவுரைகள் சொல்வதைக் காட்டிலும் ஒன்றைக் கடைப்பிடித்துக் காட்டுவது சிறந்தது! 
பொன்மொழிகள்! 

• நூறு அறிவுரைகள் சொல்வதைக் காட்டிலும் ஒன்றைக் கடைப்பிடித்துக் காட்டுவது சிறந்தது! 
- கன்பூஷியஸ்

• மற்றவர்களை அன்பால் மகிழச் செல்வதே ஒருவன் பெற்றிருக்கும் செல்வங்களிலேயே மேலான செல்வம் 
- தாகூர்

• செயலை விதையுங்கள்!...குணம் உண்டாகும்! குணத்தை விதையுங்கள்!....எதிர்காலம் உண்டாகும்! 
- போர்டுமேன்

• இன்பம் நிலையில்லாதது!...பனித்துளியைப் போன்றது! அது சிரிக்கும்போதே உலர்ந்துவிடும்! 
- தாகூர்

• இளமையில் பெரியவர்களுக்குக் கீழ்ப்படிகிறோம்!...வயதானபிறகு சூழ்நிலைக்குக் கீழ்ப்படிகிறோம்! 
- சிரில்

• மனத்திருப்தி என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம்! ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை! 
- சாக்ரடீஸ்

• ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பு இல்லாவிட்டால் அந்த ஆற்றல் மதிப்பற்றுப் போய்விடும்! 
- நெப்போலியன்

• இதயத்தைச் சுத்தப்படுத்திவிட்டு இறைவனைக் கூப்பிடு! நிச்சயம் வருவார்! 
- பைபிள்
தொகுப்பு : அ. கருப்பையா, பொன்னமராவதி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com