(பொருட்பால் - அதிகாரம் 97 - பாடல் 5 )
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
-திருக்குறள்
மலைபோல் உயர்ந்திருந்தாலும்
புகழில் சிறந்திருந்தாலும்
தரத்தைக் குறைத்துக் கொள்கிற
செயலைச் செய்யக்கூடாது.
குன்றி மணி அளவிலே
குன்றும் செயலைச் செய்தாலும்
புகழை இழந்து போவார்கள்
இழிவைத் தேடிக் கொள்வார்கள்