குறள் பாட்டு: பெருமை

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்.
குறள் பாட்டு: பெருமை

(பொருட்பால்  -  அதிகாரம்  98  -  பாடல்  5 )

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் 
அருமை உடைய செயல்.

- திருக்குறள்

பெருமையான குணங்களை 
பேணி வாழும் நல்லவர்
செயற்கரிய செயல்களைச் 
செய்து முடித்து வெல்வார்கள்

அரிய பெரிய செயல்களைச் 
செய்வதே அவர்கள் சிந்தனை 
சிந்தனை உறுதியாய் இருப்பதால்
செயல்களில் அவரே வல்லவர்.

- ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com