(பொருட்பால் - அதிகாரம் 98 - பாடல் 5 )
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
- திருக்குறள்
பெருமையான குணங்களை
பேணி வாழும் நல்லவர்
செயற்கரிய செயல்களைச்
செய்து முடித்து வெல்வார்கள்
அரிய பெரிய செயல்களைச்
செய்வதே அவர்கள் சிந்தனை
சிந்தனை உறுதியாய் இருப்பதால்
செயல்களில் அவரே வல்லவர்.
- ஆசி.கண்ணம்பிரத்தினம்