ஊக்கம் உடைமை
வெள்ளத்து அனையது மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.
- திருக்குறள்
குளத்திலுள்ள நீர்மட்டம்
எவ்வளவு உயர்ந்து உள்ளதோ
அந்த அளவில் குளத்திலே
மலர்ந்த மலர்கள் உயர்ந்திடும்
வெள்ளம் உயரும் அளவிலே
மலர்கள் மேலே உயர்ந்திடும்
உள்ளம் நிறையும் அளவிலே
உயர்வு வந்து சேர்ந்திடும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்