குறள் பாட்டு

குளத்திலுள்ள நீர்மட்டம்எவ்வளவு உயர்ந்து உள்ளதோ
குறள் பாட்டு

ஊக்கம் உடைமை
வெள்ளத்து அனையது மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.
                                             - திருக்குறள்
குளத்திலுள்ள நீர்மட்டம்
எவ்வளவு உயர்ந்து உள்ளதோ
அந்த அளவில் குளத்திலே
மலர்ந்த மலர்கள் உயர்ந்திடும்

வெள்ளம் உயரும் அளவிலே
மலர்கள் மேலே உயர்ந்திடும்
உள்ளம் நிறையும் அளவிலே
உயர்வு வந்து சேர்ந்திடும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com