பெய்யெனும் பொழுதில்
பெருமழை பொழிய
செய்யினில் கழையும்
செந்நெலும் விளைய
பொய்யெனும் திரைகள்
போகியில் எரிய
மெய்யெனும் பறையை
மேதினி அறைய
நெய்பருப் பரிசி
நிறைசர்க் கரையில்
செய்திடும் அமுதின்
சிறப்பினை அறிய
தையெனும் அரசி
தரணியில் வருக!
வையகம் தழைய
வரமதைத் தருக!
-தளவை இளங்குமரன்