""நீ அம்மா செல்லமா? அப்பா செல்லமா?''
""அம்மா, அப்பா செல்லம்!''
""அம்மா யார் செல்லம்னு நான் கேக்கலே....நீ, யாரோட செல்லம்னுதான் கேட்டேன்!''
வி.ரேவதி, 58, ராம் நகர், 4ஆவது தெரு, தஞ்சாவூர்-613007.
""ஏண்டா மாவு பாத்திரத்தை கையிலே வெச்சுக்கிட்டு ஒளிஞ்சு ஒளிஞ்சு போறே''
""அம்மாதான் மாவை "நைசா' அரைச்சுக்கிட்டு வரச்சொன்னாங்க!''
எஸ்.பொருநை பாலு, திருநெல்வேலி - 627006.
""எதுக்கு முதல் சொம்புத் தண்ணியை கீழே ஊத்தறே?''
""முதல் சொம்பை எடுத்து ஊத்திக்கும்போது குளிரும்னு அம்மா சொன்னாங்க!''
மு.முத்துராம் சுந்தர், செங்கோட்டை -627809.
இன்டர்வ்யூவில்...
""உங்க பேர் என்ன?''
""பூமணி''
""இதுக்கு முன்னாலே என்னவா இருந்தீங்க?''
""பூமணியாவேதான்!''
க.சங்கர், 48, ஜவஹர் வீதி, நாகர்பாளையம், ஈரோடு- 638452.
""அட!....ட்ரெஸ் இவ்வளவு பளிச்சுன்னு இருக்கே...... நீ என்ன சோப்பு உபயோகிக்கிறே?''
""மணி சோப்புதான் யூஸ் பண்றேன்!''
""மணி சோப்பா? அப்படி ஒரு சோப்பு இருக்கா? நான் கேள்விப்பட்டதே இல்லியே!''
""அதில்லே....எங்கண்ணன் "மணி' போட்டு வைக்கிற மீதி சோப்பைத்தான் உபயோகிக்கிறேன்!''
வி.சரவணன், சிவகங்கை.
""பாட்டி!....அப்பா "சோனி' டி.வி. வாங்கப்போறதா சொன்னாரு''
""எதுக்குடா அது? நல்லா தெம்பா, திடமா, இருக்கறதை வாங்கச் சொல்லுடா!''
ஆர்.யோகமித்ரா, சென்னை-600078.