ஒருமுறை விருதுநகர் சங்கரலிங்க நாடார் வீட்டில் காந்தி தங்கியிருந்தார். விடைபெற்றுக் கொண்டு ஊருக்குப் புறப்படும்பொழுது காந்தியின் கண்ணில் ஒரு புத்தகம் தென்பட்டது. படிப்பதற்காக அந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்றார் காந்தி! நான்கு மாதங்கள் கழிந்தன. அந்தப் புத்தகம் திரும்பி வந்தது. கூடவே ஒரு கடிதத்தில், ""அன்புள்ள சங்கரலிங்கம், தங்கள் புத்தகத்தை இத்துடன் அனுப்பியுள்ளேன். "இந்தப் புத்தகத்தை யார் எடுத்துச் சென்றாலும் திருப்பி கொடுத்துவிடவும்' என்று முன் பக்கத்தில் தாங்கள் எழுதியுள்ள குறிப்பைக் கவனித்தேன்'' என்று காந்தி எழுதியிருந்தார்.